"மான் கி பாத்'' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி, “மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி, “மான் கி பாத்’’ என்ற நிகழ்ச்சி மூலம், ரேடியோவில் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி மீண்டும் மான் கி பாத் நிகழ்ச்சியை வரும் 30-ம் தேதி முதல் துவங்க திட்டமிட்டுள்ளார். பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை மைகவ் இணையதளம் மூலம் சமர்பிக்கலாம் என ட்விட்டர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version