பிரதமர் – முதல்வர் கூட்டாக துவக்கி வைக்க இருக்கும் மெட்ரோ ரெயில் சேவை

சென்னை ஏஜி-டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நாளை கூட்டாக துவக்கி வைக்கவுள்ளனர். நாளை திருப்பூரில் தனித்தனியாக நடைபெறும் அரசு விழா மற்றும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வருகை தருகிறார். அங்கிருந்தவாறே பிரதமர் நரேந்திர மோடியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக காணொலி காட்சி மூலம் சென்னை ஏஜி-டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கிலோ மீட்டர் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை துவக்கி வைக்கின்றனர்.

இந்தநிலையில் சென்னை ஏஜி-டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Exit mobile version