டெல்லியில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version