சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.1 உயர்வு

சர்வதேச சந்தையை மையப்படுத்தி,   மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  கடந்த ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்தநிலையில், தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் வின் விலை 1 ரூபாய் 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Exit mobile version