சிலியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

சிலியில் மாணவர்கள் போராட்டத்தை கலைக்க அந்நாட்டு காவல் துறையினர் அவர்கள் மீது நீர் பிரங்கியை பாய்ச்சி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

சாண்டியாகோவில் உள்ள பள்ளிகளில் வரலாறு, உடற்கல்வி மற்றும் கலை விரிவுரைகளில், நேரங்களை குறைக்க பாடத்திட்டம் சமீபத்தில் முன்மொழியப்பட்டது. இந்த கல்வி சீர் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிராக மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அந்நாட்டு காவல் துறையினர் அவர்கள் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு மற்றும் நீர் பிரங்கி உபயோகித்து அவர்கள் போராட்டத்தை கலைத்தனர்.

Exit mobile version