மதுரையில் தனியார் வீட்டின் முன்பு கண்டெடுக்கப்பட்ட மர்ம பார்சல்

மதுரையில் தனியாரின் வீட்டின் முன்பு கிடந்த மர்ம பார்சலால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் கோவலன் நகர் பகுதியில் உள்ள பூமா என்பவரது வீட்டின் முன்பாக மர்ம பார்சல் கிடப்பதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக தகவல் வந்துள்ளது. இதனையடுத்து மாநகர வெடிகுண்டு குழுவினர் மோப்ப நாய் உதவியுடன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மர்ம பார்சலில் அரிக்கேன் விளக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சோலார் நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய பார்சல் இவரது வீட்டில் விட்டு சென்றது தெரியவந்தது.

Exit mobile version