அதிபர் தேர்தல்: இலங்கையில் பலத்த பாதுகாப்பு

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நாளை நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில், பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில், சஜித் பிரேமதாசாவும் போட்டியிடுகிறர். இந்த தேர்தலில் இவர்களோடு சேர்த்து 35 பேர் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலையொட்டி இலங்கை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலைக் கண்காணிப்பதற்காக இந்தியாவிலிருந்து செல்லும் 3 தேர்தல் கண்காணிப்பாளர்களோடு சேர்த்து மொத்தம் 14 வெளிநாட்டு பார்வையாளர்களை இலங்கை அரசு நியமித்துள்ளது.

Exit mobile version