திருநள்ளாறு கோவிலுக்கு குடியரசுத்தலைவர் வருகை: பாதுகாப்பு தீவிரம்

குடியரசுத் தலைவரின் வருகையையையொட்டி, திருநள்ளாறு கோயில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்தினருடன் இன்று சுவாமி தரிசனம் செய்யவுள்ளார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர், திருநள்ளாறு கோயிலுக்கு இன்று செல்கிறார். ரிங் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளம் அருகில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தரிசனம் முடிந்தவுடன் குடியரசுத்த தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

Exit mobile version