அத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்

தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காஞ்சிபுரம் சென்று அத்தி வரதரை தரிசனம் செய்தார்.

அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் சபாநாயகர் தனபால், அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் புறப்பட்டுச் சென்ற அவர், அத்தி வரதரை தரிசனம் செய்தனர். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version