ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சி கடந்த ஜூனில் வாபஸ் பெற்றது. இதனையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. இதனிடையே காஷ்மீரில் ஆட்சி அமைக்க ஏதுவாக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க அரசியல் கட்சிகள் முயற்சிப்பதாக கூறி கடந்த மாதம் 21ஆம் தேதி அம்மாநில சட்டபேரவையை ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்து உத்தரவிட்டார். இந்தநிலையில் 6 மாத கால ஆளுநர் ஆட்சி முடிவடைவதால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரை செய்தார். இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து வியாழக்கிழமை முதல் ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வருகிறது.

Exit mobile version