அனந்தகுமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

மத்திய அமைச்சர் அனந்த குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அனந்த குமாரின் மறைவுச் செய்தி தம்மை பெரும் துயரில் ஆழ்த்தியதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அனந்தகுமாரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள மோடி, அனந்த குமாரின் செயல்பாடுகள், அவர் ஆற்றிய பணிகள் என்றும் நம் நினைவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தனது சிறந்த நண்பர் மறைந்து விட்டதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதேபோல், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version