பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உட்பட 3 பேருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பட்டது

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாரத் ரத்னா விருதுகளை வழங்கினார்.துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். பிரணாப் முகர்ஜியுடன் மறைந்த அஸ்ஸாம் பாடகர் பூபன் ஹசாரிகா, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Exit mobile version