கோவை மஹாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர்

கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் 4ம் தேதி நடைபெற உள்ள மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்படு வருகிறது. அதன்படி இந்தாண்டு 25வது ஆண்டு மஹா சிவராத்திரி விழா வரும் வரும் 4ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கவுள்ளது. விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். விழாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் தலை சிறந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version