ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில், அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாய் திகழும் மகிழ்ச்சிகரமான நாளில், அனைவரது குடும்பத்திலும் சந்தோஷத்தையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும் என தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியுடன் இஸ்லாமிய சகோதரர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version