2 நாட்கள் பயணமாக சென்னை வந்தார் குடியரசு தலைவர்…

மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபா அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

இதனை திறந்து வைப்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்துள்ளார். இதனால் சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குடியரசு தலைவர் செல்லும் பாதை மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் தீவிர கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Exit mobile version