கோடைக்கானலில் மலர்க் கண்காட்சிக்காக தயாராகும் பூங்கா

கோடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக புதிய பூ நாற்றுகள் நடவுப்பணி தொடங்கியுள்ளது.

மலைகளின் இளவரசியான கோடைக்கானல் நகரின் மையப்பகுதியில் பிரையண்ட் பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளைக் கவரும் விதத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகளை பூங்கா நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர். குறிப்பாக வரும் மே மாதத்தில் மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளதால், பூங்காவில் புதிய வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பெங்களூரு, ஊட்டி போன்ற இடங்களில் இருந்து புதிய நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, நடவு செய்யப்பட்டு வருகிறது. இதில் சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறத்தில் பூக்கும் டேலியா வகை செடிகளும் அடங்கும்.

Exit mobile version