முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 91 மக்களவை தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது

முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 91 மக்களவை தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும், 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அரசியல் கட்சியினர், தலைவர்கள், வேட்பாளர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர். இன்று மாலை 6 மணி முதல் மே 19ஆம் தேதி மாலை ஆறரை மணி வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சமூக வலை தளங்கள், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version