விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21ல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இடைத்தேர்தலை முன்னிட்டு தனியார் பொறியியல் கல்லூரில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சுப்ரமணியன், இடைத்தேர்தலை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவம் ஆகியோரை கொண்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளதாகவும், வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version