எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அதிமுக அமோக வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்

40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அ.தி.மு.க அமோக வெற்றி பெறும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

பரமத்திவேலூரில் நாமக்கல் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பேசினார். நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராவார் என கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். வரும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் இந்த மெகா கூட்டணி தொடரும் என கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தோழமை கட்சியினர் கலந்துகொண்டனர்.

Exit mobile version