அதிமுக தலைமையிலான கூட்டணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக தலைமையிலான கூட்டணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டணி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சேலத்தில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளரான சரவணனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது என்றும், பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்க கூடிய கூட்டணி என்றும் கூறினார்.

தற்போது வெளிவரும் கருத்து கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகள் என்றும் இந்த கருத்து கனிப்பை பொய்யாக்கும் வகையில், அதிமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை பெறும் என தெரிவித்தார். 

Exit mobile version