திமுக மீது பிரேமலதா விஜயகாந்த் சரமாரி குற்றச்சாட்டு

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையக்கூடாது என்பதற்காக திமுக சூழ்ச்சிகளை செய்ததாகவும் அதனை முதல்வர் மற்றும் துணை முதல்வர் முறியடித்து வெற்றி கூட்டணியை அமைத்துள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

தஞ்சை மக்களவை தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜன் மற்றும் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் காந்தி ஆகியோரை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நதிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்தார். மெகா கூட்டணி அமையக்கூடாது என்பதற்காக திமுக நிறைய சூழ்ச்சிகளை செய்ததாக குற்றம் சாட்டிய பிரேமலதா விஜயகாந்த், அதையெல்லாம் முதல்வரும் துணை முதல்வரும் முறியடித்து வெற்றி கூட்டணியை அமைத்தியுள்ளதாக பாராட்டுத் தெரிவித்தார்.

Exit mobile version