இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு தே.மு.தி.க. நிலைப்பாடு குறித்து முடிவு – பிரேமலதா

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தே.மு.தி.க.வின் நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, காற்று மாசு பிரச்னையால் பட்டாசு வெடிக்கத் தடை என்பது டெல்லிக்கு மட்டுமே பொருந்தும் என்றும் இந்தியா முழுவதிற்கும் பொருந்தாது என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், 20 தொகுதிகளுக்கான தேர்தலாக இருந்தாலும் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என பிரேமலதா தெரிவித்தார்.

Exit mobile version