அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரேமலதா பிரசாரம்

கோவையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் அன்னனூரில் நடந்த இந்த பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து மொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் ஏராளாமான கட்சி தொண்டர்களும் , நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஊழலுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்யவேண்டும் எனவும் அதிமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version