இடி தாக்கியதில் கர்ப்பிணி பெண் பலி

துறையூரில் இடி மின்னல் தாக்கி கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தம்பி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டம் துறையூரில் பச்சைமலை அடிவாரம் அருகேயுள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன், இவரது மகள் முத்துலட்சுமியும், அவரது தம்பி குணசேகரனும் இப்பகுதியில் வயல் வெளியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென பெய்த மழையால் அங்கிருந்த மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றனர். அப்போது மரத்தின் அடியில் நின்றவர்கள் மீது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

Exit mobile version