முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கொரோனா பரிசோதனை!

தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா வைரஸை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, தலைமைச் செயலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இருவரும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பிறகு சட்டப்பேரவைக்குள் சென்றனர்.

 

Exit mobile version