பிரசாந்த் கிஷோரை பணம் கொடுத்து பெற்றுள்ள திமுக..அறிவு பஞ்சம் காரணமா?

அறிவு பஞ்சம் இருப்பதன் காரணமாக பிரசாந்த் கிஷோரை பணம் கொடுத்து திமுக பெற்றுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தில் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி வரும் காலங்களிலும் அதிமுகவுடன் தங்களின் கூட்டணி தொடரும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கூட்டணியில் இணையும் போது தாங்கள் வைத்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார்.

Exit mobile version