சின்மயி நல்ல பொண்ணு தான் யாரோ தூண்டி விடுகிறார்கள் – நடிகர் ராதாரவி

 

 

சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடிகர் தியாகராஜன் me too விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். உடன் நடிகர் ராதாரவி, வாராகி உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது பேசிய தியாகராஜன், Me too ஒரு நல்ல movement. அதை தவறாக பயன்படுத்தக் கூடாது. இது சம்பந்தப்பட்டவர்கள் மீது கீழ்தரமான எண்ணத்தை உருவாக்குகிறது. ப்ரித்திகா மேனன் தெரிவித்ததை நான் முழுமையாக மறுக்கிறேன்.

அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும், அவரை பற்றி தகவல் திரட்டி கொண்டிருக்கிறோம் கிடைத்தவுடன் வழக்கு தொடர்வேன் என்று கூறிய தியாகராஜன் அவர் சொல்லும் அந்த காட்சி கோவையில் எடுக்கவில்லை. ரஞ்சன்குடியில் தான் எடுத்தோம் என்று கூறினார்

அதற்க்கு பின்னர் பேசிய நடிகர் ராதாரவி,நடிகனை பற்றி சொன்னால் நம்புவார்கள் என நினைக்கிறார்கள். முதலில் குற்றம்சாட்டினால் அவர்கள் மீது தான் உண்மை இருக்கும் என நினைக்கிறார்கள்… எது எப்படி சரியாகும்?

நம்பர் 1 ஆட்களை யாரும் தொடமாட்டார்கள். ஏனென்றால் வாய்ப்புகள் போய்விடும் அல்லவா என கிண்டலாக பேசிய நடிகர் ராதாரவி சம்மந்தப்பட்டவர்கள் சம்மதம் இல்லாமல் எந்த தவறும் நடக்காது என்று கூறினார்.

சின்மயி விவகாரம் பற்றி பேசிய ராதாரவி யாரோ அவரை தூண்டி விட்டுதான் இப்படி பேசுகிறார் எனவும் நிரூபணம் ஆகாமல், ஆதாரம் இல்லாமல் பேசுவது தவறு என்றும் கூறினார்.

இனி எங்கெல்லாம் தொட வேண்டும் என எழுதி வாங்கிவிட்டுத் தான் நடிக்க வேண்டும் போல என்றார் கிண்டலாக பேசிய ராதாரவி இப்படியே போனால் முன்பைப் போல ஆண்களே பெண்கள் வேடம் போடும் காலம் வரும்.இதற்க்கு விஷால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதனால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை வரும் என்று செய்தியாளர் சந்திப்பின் போது ராதாரவி பேசினார்.

 

Exit mobile version