இரண்டாம் முறையாக விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து பிரக்கியான் ரோவர் அனுப்பியுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் பிரக்கியான் ரோவர், விக்ரம் லேண்டெர் நிலவின் தரைப்பரப்பில் இருக்கும் புகைப்படத்தை முன்பு அனுப்பி இருந்தது. இதனையடுத்து தற்பொழுது இரண்டாவது முறையாக விக்ரம் லேண்டரை மாற்று கோணத்தில் எடுத்த புகைப்படத்தை பிரக்கியான் ரோவர் அனுப்பியுள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து 15 மீட்டர் தொலைவில் இப் புகைப்படத்தை பிரக்கியான் ரோவர் எடுத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Discussion about this post