செம்மரம் கடத்திய வழக்கில் வேலூரைச் சேர்ந்த பிரபு என்பவர் கைது

செம்மரம் கடத்திய வழக்கில், வேலூரைச் சேர்ந்த பிரபு என்பவரை ஆந்திரா போலீசார் கைது செய்தனர்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை போலீசார் மடக்கிப் பிடித்து, சோதனை செய்தனர். லாரியில் இருந்த 67 செம்மர கட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரை கைது செய்தனர். லாரி ஓட்டுநரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் பிரபு என்பதும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

Exit mobile version