அருணாச்சல பிரதேசம், அசாமில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

அருணாச்சல பிரதேசம், அசாமில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

அருணாச்சல், அசாமில் இன்று அதிகாலை ஒன்றரை மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இதனால், அச்சம் அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. இதேபோன்று, வட கிழக்கு மாநிலங்களின் பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அண்டை நாடான திபெத், சீனா, நேபாளத்திலும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

Exit mobile version