பவர் ஸ்டார் சீனிவாசனை யாரும் கடத்தவில்லை – சீனிவாசனின் மனைவி ஜூலி தகவல்

பவர் ஸ்டார் சீனிவாசனையும் தன்னையும் யாரும் கடத்தவில்லை என அவரது மனைவி ஜூலி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

அவரை காணவில்லை என சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் அவரது மனைவி ஜூலி புகார் அளித்தார். இந்தநிலையில் சீனிவாசனின் மனைவி ஜூலியும் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து சீனிவாசனின் குழந்தைகள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து பரபரப்பை அதிகரித்தனர். இந்தநிலையில் தங்களை யாரும் கடத்தவில்லை எனவும் சொந்த காரணங்களுக்காகவே ஊட்டி வந்ததாகவும் சீனிவாசனின் மனைவி ஜூலி தெரிவித்துள்ளார்.

 

 

 

Exit mobile version