வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

இந்த மாதம் 25ம் தேதி முதல் 27 தேதி வரை நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பொருளாதார மந்தநிலையை மீட்டெடுப்பதன் ஒரு பகுதியாக 27 பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்து 12 பெரிய வங்கிகளாக செயல்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதற்கு அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் 5 நாள் வேலை, வரைமுறையற்ற வேலை நேரத்தை முறைப்படுத்தவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை வலியுறுத்தி செப்டம்பர் 25ம் தேதி நள்ளிரவு முதல் 27ம் தேதி நள்ளிரவு வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Exit mobile version