திரிபுரா கிழக்கு மக்களவை தேர்தல் ஒத்திவைப்பு

திரிபுரா கிழக்கு மக்களவைக்கான தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 11-ம் தேதி திரிபுரா மேற்கு மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றபோது பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

இந்நிலையில், ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடத்த மாநிலத்தில் ஏதுவான சூழ்நிலை நிலவவில்லை என திரிபுரா தலைமை தேர்தல் அதிகாரியும் சிறப்பு காவல் கண்பாளரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தினர். இதையடுத்து நாளை நடைபெறவேண்டிய தேர்தலை ஏப்ரல் 23ம் தேதிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது

 

Exit mobile version