திரிபுராவில் கனமழை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

திரிபுரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திரிபுரா மாநிலத்தில் உள்ள உனகோட்டி, தலாய் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஜீரி மற்றும் காக்தி ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Exit mobile version