ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் முதுகலைபட்டதாரி பெண் வெற்றி

மயிலாடுதுறை அருகே, 24 வயதான முதுகலைபட்டதாரி பெண் ஒருவர், ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்…

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில், மன்னம்பந்தல் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 16 பேர் போட்டியிட்டனர். அதில் 24 வயதான பிரியா என்ற முதுகலை பட்டதாரி பெண் 204 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். இந்நிலையில், ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியா, தன்னை வெற்றிபெற செய்த மக்களுக்கு சேவை செய்ய இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 54 ஊராட்சிகளில் மன்னம்பந்தல் ஊராட்சியை முதன்மையாக கொண்டு வர பாடுபடுவேன் என்று தெரிவித்தார். மேலும், அரசின் நலத் திட்டங்களை, அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் பணியாற்ற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, பிரியாவின் வெற்றியை அப்பகுதி மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Exit mobile version