வருங்கால போர்களில் ரசாயனம், உயிரி ஆயுதங்கள் பயன்படுத்த வாய்ப்பு

வருங்கால போர்களில் ரசாயனம், உயிரி ஆயுதங்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக  உள்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

படையினர் ரசாயன மற்றும் உயிர்க்கொல்லி தாக்குதல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வருங்கால போர்களில் எதிரிகள் ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் இதனால் மக்களின் ஆரோக்கியம், சொத்துக்கள், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version