நவீன முறையில் வரையப்பட்டுள்ள நடிகை ஸ்ரீதேவியின் ஓவியங்கள்

திருநங்கை சமூக சீர்திருத்தவாதியும், ஓவியக் கலைஞருமான கல்கி சுப்ரமணியன் நடிகை ஸ்ரீதேவியின் ஓவியங்களைக் கொண்டு கண்காட்சியை நடத்தி வருகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும் தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் முத்திரை பதித்தவருமான நடிகை ஸ்ரீதேவியின் ஓவியத்தை டிஜிட்டல் பாப் அப் தொழில்நுட்பத்தில் வரைந்த அவர், அதைக் கண்காட்சிக்கு வைத்துள்ளார். நடிப்பின் சிகரம் ஸ்ரீதேவியை நினைவுகூரும் வகையில் கண்காட்சி நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த கண்காட்சி டிசம்பர் 22ம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version