பிரபல ரவுடி வெல்டிங் குமார் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

பிரபல ரவுடி வெல்டிங் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல ரவுடி வெல்டிங் குமார் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 22 வழக்குகள் இருந்தன. கடந்த 1985ல் திருவொற்றியூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை கொலை செய்த வழக்கில் 1997ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் புழல் சிறையில் வெல்டிங்குமாரை அதேசிறையில் இருந்த அன்பு, கார்மேகம், ராஜா உள்ளிட்ட 3 பேர் இரும்பால் அடித்துக் கொலை செய்தனர். இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் மணி என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வெல்டிங்குமார் கொலை செய்யப்பட்டார். 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அன்பு, கார்மேகம் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார்.

Exit mobile version