பூந்தமல்லியில் கொரோனா ஆய்வுப் பணியின்போது பேனரில் பெயரில்லாததால் கடுப்பான திமுக எம்எல்ஏ அதிகாரிகளை மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் 74 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை அமைச்சர் நாசர், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் திறந்து வைத்தனர். முன்னதாக அங்கு வந்த பூந்தமல்லி திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி, அங்கிருந்த பேனரில் தனது பெயர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பேனரில் தனது பெயர் இல்லாதது குறித்து அதிகாரிகளை அழைத்து கிருஷ்ணசாமி மிரட்டியுள்ளார். இதையடுத்து, அதிகாரிகள் திமுக எம்எல்ஏவிடம் மன்னிப்பு கேட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post