பொன்பரப்பி சம்பவத்தில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்

நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேசிய தமிழிசை, பொன்பரப்பி சம்பவத்தில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய வேண்டும் என்றும் உணர்ச்சியை தூண்டும் போராட்டமாக மாறாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் தான் பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக தமிழிசை தெரிவித்தார்.

Exit mobile version