பொன்னமராவதி அய்யனார் கோயிலில், புரவி எடுப்பு திருவிழா

பொன்னமராவதி அருகேயுள்ள அடைக்கலம் காத்தார் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழாவை ஒட்டி, வடிவமைக்கப்பட்ட குதிரை மற்றும் தெய்வச் சிலைகளை பக்தர்கள் சுமந்து சென்றனர். ஊரின் மையப்பகுதியில் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் தேனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்கள் பொங்கல் வைத்தும் மாவிளக்கு வைத்தும் வழிபட்டனர்.

Exit mobile version