பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

சிலை கடத்தல் பிரிவு டி.ஐ.ஜியான பொன். மாணிக்கவேல் ஓய்வு பெற உள்ள நிலையில், அவரின் பதவி நீட்டிப்பு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல் பிரிவு டி.ஐ.ஜியான பொன். மாணிக்கவேல் வரும் நவம்பர் 30 தேதி ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, பதவி காலத்தை நீட்டிப்பு செய்ய, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், பொன்.மாணிக்கவேலின் பதவி காலத்தை நீட்டிப்பு செய்யக் கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு டிசம்பர் 2 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதால், பொன். மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பு குறித்து தற்போது எந்த உத்தரவும் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல், உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version