திண்டிவனத்தில் பொங்கல் சிறப்பு பரிசு அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு வழங்கும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் துவக்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் சிறப்புப் பரிசு வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு தொகுப்பு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இன்று முதல் வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இந்த திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்ததாக தெரிவித்தார். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Exit mobile version