பொங்கல் சிறப்பு பேருந்துகள் : இன்று 3,411 பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்வதற்காக பொதுமக்கள் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக மாதவரம் புதிய பேருந்துநிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்களாக அரசு பேருந்து மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

இன்று 3 ஆயிரத்து 411 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை 3 ஆயிரத்து 582 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனிடையே இன்று காலையில் இருந்தே கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தமிழக அரசு சார்பில் தேவையான அளவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் சிரமமின்றி தங்கள் ஊருக்கு சென்று வருகின்றனர்.

Exit mobile version