பொங்கல் முன்னிட்டு வண்ணக் கோலப் பொடிகள் தயாரிக்கும் பணியில் பெண்கள் ஆர்வம்

மதுரையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு வண்ணக் கோலப் பொடிகள் தயாரிக்கும் பணியில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  
மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் பெண்கள் வண்ணக் கோலங்கள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் திருநாள் நெருங்குவதால், வண்ணக் கோலப் பொடி விற்பனை சூடுபிடித்துள்ளது. இவர்கள் தயார் செய்யும் வண்ணக் கோலப் பொடிகளைப் பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும், இவற்றை அனைவரும் விரும்பி வாங்கிச் செல்வதால் உரிய வருமானம் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்த படியே இது போன்ற தொழிலில் ஈடுபடுவது மன மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version