நியாய விலைக் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

இன்று முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்குக்கும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்புடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பை ஆண்டு தோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்படும் என சட்டசபையில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது.பரிசுப்பொருள் வினியோகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று முதல், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட உள்ளது.

Exit mobile version