குமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்

குமரி மாவட்டத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியின் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன். இராதாகிருஷ்ணன் இன்று குமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் தனது பிரசாரத்தை துவக்கினார். மேலும் நாவல்காடு, ஈ.சாந்திமங்கலம், திட்டு விளை உட்பட பல்வேறு பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். பிரசாரத்தில் பேசிய அவர் குமரி மாவட்டத்தில், தொலைநோக்கு திட்டத்தின்படி 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும், சொந்த ஊரிலேயே தொழில் செய்து பிழைப்பை நடத்திக் கொள்ள ஏதுவான திட்டங்கள் தொடங்க பட்டுள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version