மாதுளை சாகுபடியில் அசத்தும் விவசாயி

வெளி மாநிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த மாதுளை தற்போது ஈரோடு பகுதியிலும் அதிகளவில் விளைவிக்கப்பட்டு வருகிறது.

அந்தியூரை அடுத்துள்ள அம்மாப்பேட்டை அருகே உள்ள தொப்பபாளையம் கிராமத்தில் அதிகளவில் மாதுளை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாதுளை சாகுபடியில் விவசாயி ரமேஷ் என்பவர் ஈடுபட்டு வருகிறார். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்ட நிலையில் குறைந்த நீரில் சாகுபடி செய்வதற்கு ஏதுவான மாதுளையை தேர்வு செய்வதாக அவர் கூறினார். சொட்டு நீர் பாசனம் மூலம் மாதுளை சாகுபடி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறைந்த நீரில் கூடுதல் விளைச்சல் தரும் மாதுளையை சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version