''வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனைகள் முடித்து தயார் நிலையில் உள்ளன'' – சத்யபிரதா சாகு தகவல்!!

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் குறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன், காணொலி காட்சி மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகத்தில் காலியாக உள்ள சேப்பாக்கம், குடியாத்தம், திருவொற்றியூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் முதற்கட்ட சோதனைகளை முடித்து தயார் நிலையில் இருப்பதாகவும் சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

Exit mobile version