பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்ற முடிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக இன்று காலை இவ்வழக்கினை சிபிசிஐடி க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு குறித்து தொடர்ந்து தவறான கருத்துகள் பரப்பப்படுவதால் நேர்மையான நியாயமான விசாரணை நடைபெறும் பொருட்டு தமிழக அரசு சிபிஐக்கு மாற்றும் முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version